Jump to content

Wy/ta/கழுகுமலை

From Wikimedia Incubator
< Wy | ta
Wy > ta > கழுகுமலை

கழுகுமலை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓர் வளரும் ஊராகும். இவ்வூர் கோவில்பட்டி மற்றும் சங்கரன்கோயில் ஆகிய நகரங்களுக்கு நடுவில் உள்ளது.

புரிதல்

[edit | edit source]

கழுகுமலை 8-ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் முக்கியமான நகரமாகும். இவ்வூர் அரைமலை என்று அழைக்கப்பட்டது. சைனர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்கியது. இங்கு மகாவீரர் வழிபடப்பட்டார். மேலும் அவரது போதனைகளும் நிகழ்த்தப்பட்டன.


வந்து சேர

[edit | edit source]

இவ்வூர் கோவில்பட்டியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. கோவில்பட்டி வழியாக சங்கரன்கோயில் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கழுகுமலையில் நின்று செல்லும்.

பார்க்க

[edit | edit source]
ஒரே பாறையில் செதுக்கப்பட்ட வெட்டுவான் கோயில்
  • வெட்டுவான் கோயில்
  • சைனர்கள் உறைவிடம்
சைன பாறைவெட்டுக்கள்
  • கழுகாசலமூர்த்தி கோயில்

செய்தல்

[edit | edit source]
  • சிற்பங்களை நிறையப் புகைப்படங்கள் எடுங்கள்.
  • அந்தப் பகுதியில் 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களின் வரலாற்றைப் புரிந்துகொள்ளுங்கள்.

வாங்க

[edit | edit source]

கோயிலில் படைப்பதற்காகப் பூக்களை வாங்குங்கள். கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் உணவை வாங்குங்கள்.


உறங்க

[edit | edit source]

கழுகுமலையில் தங்கும் விடுதிகள் இல்லை. கோவில்பட்டியில் தங்க வேண்டும்.

மேலும் செல்ல

[edit | edit source]

புவியியல் ஆள்கூறுகள்

[edit | edit source]

(9.1500°N, 77.7167°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இவ்வூர் அமையப் பெற்றுள்ளது.