Jump to content

Wy/ta/இராமேசுவரம்

From Wikimedia Incubator
< Wy | ta
Wy > ta > இராமேசுவரம்
Wy/ta/இராமேசுவரம்

மேலிருந்து இராமநாதசுவாமி கோயில், பாம்பன் பாலம், மீன்பிடி படகுகள்

இராமேசுவரம் என்பது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராகும். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது.

ஒரு பார்வை

இது இந்தியாவின் முதன்மை நிலப்பகுதியிலிருந்து பாம்பன் கால்வாயால் பிரிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் மன்னார் தீவிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ளது. இராமேசுவரம் இந்திய தீபகற்பத்தின் முனையில் மன்னார் வளைகுடாவில் உள்ளது. ராமேஸ்வரம் தீவு என்றும் அழைக்கப்படும் பாம்பன் தீவு, பாம்பன் பாலம் மூலம் இந்தியாவின் முதன்மை நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

எப்படிச் செல்வது

வானூர்தி

APJ அப்துல் கலாம் நினைவுச்சின்னம்
ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடம், ராமேஸ்வரம்
தனுஷ்கோடியின் இடிபாடுகளில் மயில்கள்
தனுஷ்கோடி இடிந்த தேவாலயம்

அருகிலுள்ள வானூர்தி நிலையம் மதுரையில் உள்ளது, இது இராமேசுவரத்திலிருந்து 174 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தியாவின் பெரும்பாலான முக்கிய நகரங்களிலிருந்து இங்கு நாள்தோறும் வானூர்தி சேவைகள் உள்ளன.

தொடருந்து

இராமேசுவரம் [RMM] மதுரை, திருச்சிராப்பள்ளி, சென்னை ஆகிய நகரங்களிலிருந்து தினசரி தொடருந்துகள் மூலம் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், கன்னியாகுமரியிலிருந்து நேரடி இணைப்பு கிடைக்கிறது, ஆனால் தினசரி வண்டி இல்லை. வட இந்திய நகரங்களிலிருந்து நேரடி வண்டியைக் கண்டுபிடிப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம்.

சாலை வழியாக

தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்து, இரவு நேர பேருந்துகள் உட்பட பேருந்து போக்குவரத்துகள் உள்ளன. சுற்றுலா மகிழுந்துகள், தானி/மிதிவண்டி ரிக்‌சாக்கள், குதிரை வண்டிகள் போன்றவையும் வாடகைக்கு கிடைக்கின்றன. ஒரு சிறிய மகிழுந்துக்கு (இண்டிகா) வாடகை கட்டணம் ஒரு கி.மீ.க்கு சுமார் ₹5 ஆகும். மதுரையிலிருந்து இராமேசுவரத்துக்கு மேற்கோள்ளும் பயணத்திற்கு சுமார் ₹1800 செலவாகும். ஆந்திரப் பிரதேச மாநில போக்குவரத்துக் கழகம் (APSRTC) இராமேசுவரம் - திருப்பதி தினசரி பேருந்தை இயக்குகிறது.

பார்க்க

  • இராமநாதசுவாமி கோயில் - இக்கோயில் கடல் அருகில் கிழக்குப் பகுதியில் உள்ளது. இக்கோயில் பிரமாண்டமான பிரகாரங்களைக்கொண்டது. பல அரசர்களால் பல காலங்களில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் நன்மை பயக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.
  • அக்னி தீர்த்தம்
  • தனுஷ்கோடி - (18 கி.மீ.) - 1964-ஆம் ஆண்டு புயல் காற்றில் முற்றிலும் நாசமடைந்துவிட்டது. தனுஷ்கோடி பகுதியின் ஆரம்ப இடம் வரை அரசு பேருந்து செல்லும். தனுஷ்கோடி விளிம்பினுக்குச் செல்ல வேண்டும் என்றால் அங்கு இருக்கும் கூண்டு வண்டியில் (van) செல்ல வேண்டும். அங்கு சுனாமியால் இடிபட்ட தொடருந்து நிலையம், கோவில் ஆகியவற்றைப் பார்க்கலாம். தனுஷ்கோடியின் கடைசிப்பகுதி, வாழத்தகுதியற்ற இடம் என அரசால் அறிவிக்கப்பட்ட போதிலும் அங்கு 100-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இந்தியப்பெருங்கடலும், வங்காள விரிகுடாவும் ஒன்றாக சங்கமிக்கும் அற்புதக்காட்சியை அங்கு நாம் காணலாம்.
  • ராமர் பாதம்
  • பாம்பன் பாலம் - இராமேஸ்வரம் தீவை இந்தியாவுடன் இணைக்கும் பாலமாகும். 1964-இல் வந்த சுனாமியால் இப்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பயணிகள் ரயில் அப்படியே அடித்துச் செல்லப்பட்டது.
  • டாக்டர் ஆ. பா. ஜே. அப்துல் கலாமின் இல்லம், பள்ளிவாசல் தெரு (ஸ்ரீ இராமந்தசுவாமி கோயிலிலிருந்து 10 நிமிட நடைப்பயணம்). முன்னாள் சனாதிபதி டாக்டர் ஆ. பா.ஜே. அப்துல் கலாமின் இல்லமானது பார்வையிட ஒரு சுவாரஸ்யமான இடமாகும். அவரது இல்லம் அவரது குழந்தைப் பருவ நினைவுகளைக் கொண்டிருக்கும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. குழந்தைப் பருவம் முதல் அவரது ஆராய்ச்சி காலம் வரை இந்த எளிய மனிதரின் அசாதாரண வாழ்க்கையைப் பற்றிய ஒரு சித்திரத்தைப் பெற இந்த இடம் சிறந்தது. டாக்டர் கலாமின் பல ஒளிப்படங்களும், விருதுகளும் இந்த இரண்டு மாடி கட்டடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது அவரது அண்ணனின் குடும்பத்தினரால் பராமரிக்கப்படுகிறது. வீட்டின் ஒரு பகுதி பல்வேறு வகையான பொருட்களை விற்கும் கடையாக மாற்றப்பட்டுள்ளது.
  • டாக்டர் ஆ. பா. ஜே. அப்துல் கலாம் நினைவகம் இது மிகவும் அழகான, பிரமாண்டமான கட்டடமாகும். டாக்டர் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் இது திறக்கப்பட்டது. தேசிய ஒருங்கிணைப்பின் அடையாளமாக, இந்த நினைவுச்சின்னம் முகலாய மற்றும் இந்திய கட்டிடக்கலைகளின் கலவையாக கட்டபட்டுள்ளது. கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்றாகும். பிரதான அரங்குகளுக்குள் ஒளிப்படம் எடுக்க அனுமதி இல்லை. நுழைவு கட்டணம் இல்லை.
  • மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்கா. மன்னார் வளைகுடாவின் 21 தீவுகளும் அருகிலுள்ள பவளப்பாறைகளைக் கொண்ட பகுதிகளும் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இந்தப் பூங்காவில் பவளப்பாறைகள், கடற்பாசிகள், கடல் புற்கள், சதுப்புநிலங்கள் போன்ற கடல் கூறுகள் உள்ளன. பூங்காவிற்குள் நுழைய வனத்துறையினால் குத்துக்கல் கடற்கரையில் இருந்து படகு சவாரி வசதிகள் செய்யபட்டுள்ளன. அதில் குருசடை தீவுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
  • ஆதாம் பாலம் (இராமர் பாலம்). இந்தியாவிலிருந்து இலங்கை வரை நீண்டு செல்லும் சுண்ணாம்புப் பாறைகளின் தொடர் சங்கிலி. இவை முந்தைய நிலப் பாலத்தின் எச்சங்கள் என்று புவியியலாளர்களால் நம்பப்படுகிறது. இது இராவணனிடமிருந்து தன் மனைவி சீதையை மீட்பதற்காக இலங்கைக்குச் செல்வதற்காக இராமரின் படைகளால் (வாணரர்கள்) கட்டப்பட்டதாக இந்துக்கள் நம்புகின்றனர்.
  • பத்ரகாளியம்மன் கோயில் (கந்தமாடன பர்வதத்திற்குச் செல்லும் வழியில் பிரதான கோயிலிலிருந்து 2 கி.மீ.). தேவி துர்க்கைக்கான கோயில்.
  • பஞ்ச முக அனுமன் கோயில் (பிரதான கோயிலிலிருந்து 2 கி.மீ.). 1964 சூறாவளியின் போது தனுஷ்கோடியிலிருந்து கொண்டு வரப்பட்ட ராமர், சீதை, அனுமன் சிலைகள் இங்கு வைக்கப்பட்டன.
  • கந்தமாதன் குன்று என்பது 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு குன்றுப்பகுதியாகும். இதுவே தீவின் மிக உயரமான இடமாகும். இங்கே ஒரு சக்கரத்தில் ராமரின் பாதச் சுவட்டைக் காணலாம். இந்த இடத்திலிருந்து பார்த்தால் இராமேசுவரம் தீவு முழுவதும் தெரியும்.
  • ஜட தீர்த்தம் (தனுஷ்கோடி சாலையில் இராமேசுவரத்திலிருந்து சுமார் 3.5 கி.மீ தொலைவில் உள்ளது). இராமர், இராவணனைக் கொன்று திரும்பி வரும் வழியில், இராமலிங்கத்தை (அவரால் பிரதிட்டை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது) வணங்கினார் என்று தொன்மக்கதை கூறுகிறது. அவ்வாறு செய்வதற்கு முன், இந்த தீர்த்தத்தில் முழுக்கு போட்டார் என்று நம்பப்படுகிறது.
  • கோதண்ட இராமர் கோயில் (இராமேசுவரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில்). இராவணனின் சகோதரன் விபீடணன் இங்குதான் இராமரிடம் வந்து சேர்ந்ததாக ஒரு நம்பிக்கை உள்ளது.
  • நம்பு நாயகியம்மன் கோயில் (தனுசுகோடி செல்லும் வழியில் இராமேசுவரத்தில் உள்ள பிரதான கோயிலிலிருந்து 8 கி.மீ.). இராமநாதபுரம் மாவட்ட மக்களால் பெரிதும் போற்றப்படும் கோயில்.
  • சாட்சி அனுமன் கோயில் (பிரதான கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில், கந்தமாதன் குன்றுக்குச் செல்லும் வழியில்.). மிகச் சிறிய சாலையோரக் கோயில். சீதையைக் கண்டுபிடித்த நற்செய்தியை அனுமன் இராமருக்கு சீதையின் சூடாமணியைக் கொண்டுவந்து காட்டி தெரிவித்த இடமாகக் கருதப்படுகிறது.
  • சுக்ரீவர் கோயில்/தீர்த்தம் (கந்தமாதன் குன்றுக்குச் செல்லும் வழியில் தூர்தர்சன் கேந்திரத்திற்கு அருகில்).
  • வில்லூண்டி தீர்த்தம் (பாம்பன் செல்லும் வழியில் பிரதான கோயிலிலிருந்து 7 கி.மீ.). இது நன்னீர் கிடைக்கும் கிணறு போல கடல் பகுதியில் காணப்படுகிறது.

வாங்க

நீங்கள் கடல் சங்கினாலான பொருட்களை வாங்க ஆர்வமானவராக இருந்தால், டாக்டர் கலாம் வீட்டிற்கு அருகிலுள்ள லீமா ஷாப்பிங்கைப் பார்வையிடவும். இராமேசுவரத்தில் உள்ள மற்ற இடங்களை விட ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் தரமான பொருட்களைப் பெறலாம்.

உண்ண பருக

பல மார்வாடி போஜனாலாயங்கள், பாதி நிதியுதவியுடன் இயங்கும் தொண்டு உணவகங்களானது, கோயிலின் மேற்கு நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ளன. அங்கு நியாயமான விலையில் நல்ல உணவை வழங்குகின்றன.

  • குஜராத் பவன். அருமையான வீட்டு உணவுகள் இங்கு கிடைக்கின்றன, என்றாலும் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டி இருக்கும். கோயிலின் கிழக்கு வாயிலில் இருந்து வெளியேறி நேராக, கடற்கரையை நோக்கி சுமார் 200 மீட்டர் நடந்தால், வலது புறத்தில் இந்த இடத்தை அடையலாம்.
  • இராம் நிவாஸ். இந்திய சீன உணவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக உள்ளனர். சேவை கொஞ்சம் மெதுவாகவே இருக்கும், ஆனால் உணவு மதிப்புள்ளது. அங்கு செல்ல, பேருந்து நிலையத்திலிருந்து வரும்போது கோயிலில் வலதுபுறம் திரும்பி சுமார் 50 மீட்டர் நடந்து செல்லுங்கள்.

உறங்க

  • புலு கோரல் காட்டேஜ் (Blue Coral Cottage), அகஸ்தியர் தீர்த்தம் (தமிழ்நாடு ஓட்டலுக்கு அருகில்), ☏ +091 -957807635. இந்த விடுதி கோயிலுக்கும், கடலுக்கு அருகிலும் உள்ளது. உணவ வசதி இல்லை. அறைவாடகை 1350 முதல் உள்ளது.
  • தெவீக ஓட்டல்ஸ் (Daiwik Hotels), தே.நெ- 49, மதுரை இராமேசுவரம் நெடுஞ்சாலை (இராமேசுவரம் பேருந்து நிலையம் அருகில்), ☏ +91 4573301401, +91 4573223222
  • ஓட்டல் ராயல் பார்க் (Hotel Royal Park,), செம்ம மடம், இராம்நாத் நெடுஞ்சாலை (பாம்பன் பாலத்திற்குப் பிறகு பிரதான நெடுஞ்சாலையில்), ☏ +91 4573 221680. இராமேசுவரம் ஒரு சிறிய நகரம் என்பதைக் கருத்தில் கொண்டால் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. காலை உணவு இலவசம் இல்லை. ஒரு நல்ல சைவ உணவகமும் விடுதியில் உள்ளது. ஊழியர்கள் அன்பாகவும் நட்பாகவும் இருக்கிறார்கள். மகிழுந்துகளுக்கு போதுமான பாதுகாப்பான நிறுத்துமிடம் உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அறை சேவை வழங்கப்படுகிறது. ஆனால் இது பிரதான கோவிலிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. ₹1650 + ₹200 சொகுசு வரி.
  • தமிழ்நாடு ஓட்டல் (ஓட்டல் அக்னிதீர்த்தம்) (இராமநாதசுவாமி கோயிலுக்கு அருகில் கடலுக்கு முன்னால்), ☏ +91 4573-221064-67, ttdc@vsnl.com. இந்த தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக விடுதி நியாயமான விலையில் நல்ல தங்குமிடத்தை வழங்குகிறது. இது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ₹300-900.
  • ஸ்ரீ பழனியாண்டவர் லாட்ஜ் A/C, 1/8A தெற்கு தேர் வீதி (கோயிலிலிருந்து 500 மீ), ☏ +91 59340123. நல்ல சேவையுடன் கூடிய நல்ல விடுதி. ₹1200.

அடுத்து செல்ல