Jump to content

Wy/ta/அல்பேனியா

From Wikimedia Incubator
< Wy | ta
Wy > ta > அல்பேனியா
Wy/ta/அல்பேனியா

அல்பேனியா என்பது ஐரோப்பாவின் பால்கன் பிராந்தியத்தில் உள்ள ஒரு நாடாகும். இந்நாட்டில் மாசுபடாத கடற்கரைகள், மலைப்பாங்கான நிலப்பரப்புகள், பாரம்பரிய உணவு வகைகள், தொல்பொருள் கலைப்பொருட்கள், தனித்துவமான மரபுகள், குறைந்த விலைகள் மற்றும் கிராமப்புறங்களின் வனப்புமிக்க சூழல் ஆகியவை உள்ளன. இது ஐரோப்பாவின் அதிக சூரிய ஒளி பெறும் நாடான இது ஒரு விரிவான தொல்பொருள் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. 1912-ஆம் ஆண்டில் தனது முதல் சுதந்திரப் பிரகடனம் வரை இது பண்டைய கிரேக்கம், ரோமானியப் பேரரசு மற்றும் ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் இது ஒரு இராச்சியமாகவும், அதன்பின் ஒரு பொதுவுடைமை சர்வாதிகாரமாகவும் இருந்து, இறுதியாக ஒரு சனநாயகக் குடியரசாக மாறியது. ஐரோப்பாவில் உள்ள ஒரு சில முசுலிம் பெரும்பான்மை நாடுகளில் அல்பேனியாவும் ஒன்றாகும்.

புரிதல்

[edit | edit source]
noframe

அல்பேனியாவில் பெரும்பான்மையான மக்கள் இசுலாமியப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் (55–65%), கருத்துக்கணிப்புகளின்படி, சுமார் 35% அல்பேனியர்கள் இறை இருப்பை அறியமுடியாது என்று கருதுபவர்களாகவும் 22% பேர் நாத்திகர்களாகவும் 19% பேர் இசுலாமியர்களாகவும், 15% பேர் மரபுவழி கிறித்துவர்ககாவும் 8% பேர் கத்தோலிக்கர்கள் மற்றும் 1% பேர் பிற மதங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலான திருமணங்கள் இங்கு மிகவும் பொதுவானவை.

பாரம்பரிய அல்பேனியப் பண்பாடு விருந்தினரின் பங்களிப்பையும் அவர்களையும் உயர்வாக மதிக்கிறது. இந்த உயரிய இடத்திற்குப் பதிலாக, விருந்தினரிடமிருந்தும் மரியாதை எதிர்பார்க்கப்படுகிறது. அல்பேனியர்கள் நகர வீதிகளில் நீண்ட நேரம் உலாவுவதையும், காபி அருந்துவதையும் விரும்புகிறார்கள்; அதேவேளையில், இளைய தலைமுறையினர் கஃபேக்களில் நேரம் செலவிடுவது மற்றும் நடனம் ஆடுவது போன்ற இரவு நேரச் செயல்பாடுகளில் ஈடுபடுவதை விரும்புகின்றனர்.

ஐரோப்பிய தரத்தின்படி அல்பேனியா ஓர் ஏழை நாடாகும்.

அல்பேனியா என்ற ஆங்கிலப் பெயர், பழங்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த இல்லிரியன் பழங்குடியினரின் கிரேக்கப் பெயரான அல்பானோய் என்பதிலிருந்து வந்தது. அல்பேனியர்கள் தங்கள் நாட்டை சுகிபேரியா என்று அழைக்கிறார்கள், இதன் பொருள் "கழுகுகளின் நிலம்" என்பதாகும். அல்பேனியர்கள் ஒரு கருங்கழுகின் வழித்தோன்றல்கள் என்ற பழைய புராணக்கதையிலிருந்து இந்தப் பெயர் வந்தது. 15 ஆம் நூற்றாண்டிலேயே, "தேசத்தின் தந்தை" என்று அழைக்கப்படும் சிகந்தர்பெக்கு, இரட்டைத் தலை கருங்கழுகை ஒரு சின்னமாகக் பயன்படுத்தினார். மேலும் அது இன்றும் அந்நாட்டின் கொடியில் காணப்படுகிறது.

வரலாறு

[edit | edit source]

1385-ஆம் ஆண்டு தொடங்கி, உதுமானியப் பேரரசால் தற்போதைய அல்பேனியா அமைந்துள்ள பகுதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிந்தது. 1443-ஆம் ஆண்டில் சியார்ச்சு காசுட்ரியோட்டி சிகாண்டர்பெக் தலைமையில் ஒரு கிளர்ச்சி தொடங்கியது. இக்கிளர்ச்சி 1479-ஆம் ஆண்டிலேயே ஒடுக்கப்பட்டது. அல்பேனியாவில் உதுமானியர் ஆட்சி 1912-ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்ததுடன், அல்பேனியா மீண்டும் ஒரு தனி நாடானது.

1939-ஆம் ஆண்டில், பாசிச இத்தாலியால் அல்பேனியா கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாசி செருமனியால் ஆக்கிரமிக்கப்பட்டது. அல்பேனியர்கள் தங்கள் நாட்டில் வசித்த சிறிய அளவிலான யூதர்களையும், அங்கு தஞ்சம் புகுந்த சில நூறு வெளிநாட்டு யூதர்களையும் மிகவும் திறம்படப் பாதுகாத்தனர். இதன் விளைவாக, நாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில், போருக்கு முந்தைய எண்ணிக்கையை விடப் போரின் முடிவில் அதிக எண்ணிக்கையிலான யூதர்களைக் கொண்டிருந்த ஒரே நாடாக அல்பேனியா திகழ்ந்தது.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் அச்சு நாடுகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிர்ப்பு இயக்கத் தலைவரான என்வர் ஓக்சா தலைமையில் ஒரு பொதுவுடைமை அரசாங்கம் அங்கு நிறுவப்பட்டது. அல்பேனியா, மேற்கு ஐரோப்பாவின் சந்தை சார்ந்த சனநாயக நாடுகளிடமிருந்து மட்டுமல்லாமல், சோவியத் ஒன்றியம், சீனா மற்றும் அண்டை நாடான யூகோசுலாவியாவிடமிருந்தும் கூட விலகித் தனித்து நின்றதற்காக அறியப்பட்டது. அல்பேனியாவை உலகின் முதல் "நாத்திக அரசு" என்றும் ஓக்சா அறிவித்தார். இதனால், பல பொதுவுடைமைக் கட்சிகளிடம் காணப்பட்ட மத-எதிர்ப்புக் கொள்கை அல்பேனியாவில் இன்னும் தீவிரமாக வெளிப்பட்டது. கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பா முழுவதும் 'இரும்புத் திரை' விலகி பொதுவுடைமைவாதிகள் அதிகாரத்தை இழந்த நிலையிலும் கூட, அல்பேனியா மட்டும் தனது பாதையிலேயே தனித்துத் தொடர உறுதியுடன் இருந்தது.

ஆனால் 1992-ஆம் ஆண்டில் ஓக்சாவின் மரணத்திற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, பொதுவுடைமைக் கட்சி அதிகாரத்தைக் கைவிட்டது. மேலும் அல்பேனியா ஒரு கூட்டணி அரசாங்கத்துடன் பல கட்சி சனநாயகத்தை நிறுவியது. ஆரம்பத்தில் இந்த மாற்றம் கடினமாக இருந்தது, ஏனெனில் அரசாங்கங்கள் அதிக வேலையின்மை, சிதைந்த உள்கட்டமைப்பு, பரவலான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் சீர்குலைக்கும் அரசியல் எதிரிகளைச் சமாளிக்க முயன்றன. பரவலான பிரமிடு திட்டத்தின் தோல்வியால் தூண்டப்பட்டு, 1997-ஆம் ஆண்டில் ஒரு உள்நாட்டுப் போர் வெடித்தது. இதன் விளைவாக ஐ.நா. தலையிட்டது. இன்று அல்பேனியா, ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்பைத் தனது இலக்காகக் கொண்டு, நவதாராளவாதத்தை நோக்கி நெருங்கி வருகிறது; அல்பேனியா 2006-ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு நிலைப்படுத்தல் மற்றும் கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மேலும் 2014-ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் நாடாக ஆனது. இதன் மூலம் சேருவதற்கான முதல் முக்கிய படியை நிறைவு செய்தது. 2008-ஆம் ஆண்டில், அல்பேனியா நேட்டோவில் சேருவதற்கான அழைப்பைப் பெற்று, அந்தக் கூட்டணியில் இணைந்தது.

காலநிலை

[edit | edit source]

அட்ரியாட்டிக் மற்றும் அயோனியன் கடல்களை நோக்கி அமைந்துள்ள கடற்கரையையும், உயரமான பால்கன் நிலப்பரப்பை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளையும் கொண்டிருப்பதுடன், குளிர்காலம் மற்றும் கோடைக்காலங்களில் பல்வேறு வானிலை அமைப்புகளின் தாக்கத்திற்கு உட்படும் அட்சரேகையில் முழு நாடும் அமைந்திருப்பதால், பரப்பளவில் சிறிய நாடாக இருந்தாலும் அல்பேனியாவில் ஏராளமான காலநிலை மண்டலங்கள் காணப்படுகின்றன. கடலோரத் தாழ்நிலப் பகுதிகளில் பொதுவாக மத்தியதரைக் கடல் காலநிலை நிலவுகிறது; மலைப்பகுதிகளில் மத்தியதரைக் கடல்–கண்டகாலநிலை காணப்படுகிறது. தாழ்நிலப் பகுதிகளிலும் உள்நாட்டுப் பகுதிகளிலும், வடக்கிலிருந்து தெற்குப் பகுதிகளுக்குச் செல்லச் செல்ல காலநிலையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன.

தாழ்வான பகுதிகளில் குளிர்காலம் மிதமானதாக இருந்து, சராசரி வெப்பநிலை சுமார் 7°செல்சியசு (45°பாரங்கீட்டு) ஆக இருக்கும். கோடைக்கால வெப்பநிலை சராசரியாக 24°செல்சியசு (75°பாரங்கீட்டு) ஆக இருக்கும். தெற்குப் பகுதி தாழ்நிலங்களில், ஆண்டு முழுவதும் வெப்பநிலை சராசரியாக சுமார் 5°செல்சியசு (9°பாரங்கீட்டு) வெப்பநிலைக்கு அதிகமாக இருக்கும். இந்த வெப்பநிலை வித்தியாசம் கோடைக்காலத்தில் 5°செல்சியசிற்கும் (9°பாரங்கீட்டு) அதிகமாகவும், குளிர்காலத்தில் அதைவிடச் சற்று குறைவாகவும் இருக்கும்.

உள்நாட்டுப் பகுதிகளின் வெப்பநிலையானது, அட்சரேகை அல்லது வேறு எந்தக் காரணியை விடவும், உயர வேறுபாடுகளால் அதிகமாகப் பாதிக்கப்படுகிறது. மலைப்பகுதிகளில் நிலவும் குறைந்த குளிர்கால வெப்பநிலைக்கு, கிழக்கு ஐரோப்பா மற்றும் பால்கன் பகுதிகளில் வானிலையை ஆதிக்கம் செலுத்தும் கண்டக் காற்றுத் தொகுதியே காரணமாகும். பெரும்பாலான நேரங்களில் வட மற்றும் வடகிழக்குக் காற்றுகள் வீசுகின்றன. சராசரி கோடைக்கால வெப்பநிலையானது கடலோரப் பகுதிகளை விடவும், உயரமான பகுதிகளில் மிகவும் குறைவாகவும் உள்ளது. ஆனால் தினசரி ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கின்றன. உள்நாட்டுப் படுகைகளிலும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும், ஆனால் இரவுகள் பெரும்பாலும் குளிர்ச்சியாகவே இருக்கும்.

மத்திய தரைக்கடலிலிருந்து வீசும் காற்றும் நிலப்பகுதியின் காற்றுத் தொகுதியும் சந்திப்பதால், இப்பகுதியில் சராசரி மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. நிலப்பரப்பு உயரும் இடத்தில் இக்காற்றுகள் பெரும்பாலும் சந்திப்பதால், மத்திய உயர்நிலப் பகுதிகளிலேயே மிக அதிக மழை பெய்கிறது. மத்திய தரைக்கடல் பகுதி காற்று மேல்நோக்கி உந்தப்படும்போது உருவாகும் செங்குத்து காற்று ஓட்டங்கள், அடிக்கடி இடியுடன் கூடிய மழையையும் ஏற்படுத்துகின்றன. இத்தகைய புயல்களில் பல, பலத்த உள்ளூர் காற்று மற்றும் பெருமழையுடன் கூடியவையாக அமைகின்றன.

நகரங்கள்

[edit | edit source]

பார்க்க

[edit | edit source]

சாப்பிட

[edit | edit source]

குடிக்க

[edit | edit source]

அடுத்து செல்ல

[edit | edit source]