Wy/ta/காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் என்ற நகரமானது, சில சமயம் 'காஞ்சி' அல்லது 'காஞ்சிவரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூர் இந்துக்களின் முக்கியமான புனிதத் தலமாகக் கருதப்படுகிறது. காஞ்சிபுரம் கண்கவர் கட்டடக்கலை கொண்ட பல இடைக்கால கோயில்களைக் கொண்டுள்ளது. 4 ஆம் நூற்றாண்டு முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை இந்நகரம் பல்லவர்களின் தலைநகரமாக இருந்து வந்தது. மேலும் தென்னிந்தியாவின் அனைத்து முக்கிய சமயங்களுக்கும் கற்றல் மையமாக இருந்தது. இந்துக் கோயில்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன, மேலும் சமணக் கோயில்களும் உள்ளன. காஞ்சிபுரம் தென்னிந்தியாவில் பௌத்தத்தின் மையமாகப் புகழ் பெற்றிருந்தாலும், சீன பௌத்தத் துறவிகள் இங்கு வருகை தந்திருந்தாலும், எதிா்பாராதவிதமாக, இன்று பௌத்த இருப்புக்கான எச்சங்கள் எதுவும் இல்லை.
நவீன காஞ்சிபுரம் ஒரு முக்கிய பட்டு நெசவு மையமாக உள்ளது. பார்வையாளர்கள் மொத்த விலையில் கைத்தறியால் நெய்த பட்டாடைகளை வாங்க முடியும்.
எப்படி செல்வது
[edit | edit source]தொடருந்தில்
[edit | edit source]காஞ்சிபுரத்தில் ஒரு தொடருந்து நிலையம் உள்ளது; இருப்பினும், இங்கு தொடருந்து சேவை போதுமானதாக இல்லை. மெதுவாகச் செல்லும் பயணிகள் இரயில்கள் காஞ்சிபுரத்தையும் சென்னையின் புறநகர்ப் பகுதியான செங்கல்பட்டையும் இணைக்கின்றனவே தவிர, சென்னை மாநகரத்துடன் நேரடியாக இணைப்பதில்லை. மற்றொரு பயணிகள் இரயில் காஞ்சிபுரத்தைத் திருப்பதியுடன் இணைக்கிறது. மும்பையிலிருந்து மதுரை செல்லும் விரைவு இரயில்கள் வாரத்திற்கு இருமுறை காஞ்சிபுரத்தில் நின்று செல்கின்றன. மும்பையிலிருந்து காஞ்சிபுரம் வரையிலான பயண நேர அட்டவணையின்படி 26 மணிநேரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது; ஆனால், நடைமுறையில் இரயில் இதைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்ளக்கூடும் என்பதை நினைவில் கொள்க. எனவே, சென்னைக்கு இரயிலில் சென்று, அங்கிருந்து சாலை வழியாகப் பயணிப்பதே பெரும்பாலும் விரைவானதாகவும், அதிக வசதியானதாகவும் இருக்கும்.
பேருந்தில்
[edit | edit source]தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் காஞ்சிபுரத்திலிருந்து தமிழ்நாட்டின் பெரும்பாலான முக்கிய நகரங்களுக்குப் பேருந்துகளை இயங்குகின்றன.
சென்னையிலிருந்து
[edit | edit source]சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் ஒரு பேருந்து புறப்படுகிறது. மேலும், தி-நகர் மற்றும் சென்னை புறநகர் பேருந்து நிலையங்களிலிருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை குளிரூட்டப்பட்ட பேருந்து புறப்படுகிறது.
பெங்களூரிலிருந்து
[edit | edit source]பெங்களூரிலிருந்து காஞ்சிபுரத்திற்கு ஒரு நாளைக்கு ஏழு முறை பேருந்துகள் புறப்படுகின்றன.
மாமல்லபுரத்திலிருந்து
[edit | edit source]மாமல்லபுரத்திலிருந்து ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து புறப்படுவதாகத் தெரிகிறது. பிற்பகல் 3:30 மணி வரையிலும், அநேகமாக அதற்குப் பிறகும் கூட பேருந்துகள் உள்ளன. உங்களுக்கு நேரடிப் பேருந்து கிடைக்கவில்லை என்றால், பாதித் தூரம் வரை சென்றுவிட்டு, அங்கிருந்து 212B பேருந்திலோ அல்லது சற்று அதிக கட்டணம் கொண்ட, விரைவாகச் செல்லக்கூடிய தனியார் பேருந்திலோ மாறி உங்கள் பயணத்தை நிறைவு செய்யலாம்.
சொந்த வண்டியில்
[edit | edit source]காஞ்சிபுரம் சென்னையிலிருந்து 69 கி.மீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து சுமார் 280 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. நீங்கள் சென்னை-பெங்களூர் விரைவுச்சாலையில் பயணித்தால், சென்னையின் புறநகர்ப் பகுதியிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும், பெங்களூரிலிருந்து நான்கரை மணி நேரத்திலும் காஞ்சிபுரத்தை அடையலாம். திருப்பதி வழியாக காரில் பயணித்தால், மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை ஆகும்.
மாநில நெடுஞ்சாலை 58, காஞ்சிபுரத்தை செங்கல்பட்டுடன் இணைக்கிறது; செங்கல்பட்டை சென்னை வழியாகவோ அல்லது மாமல்லபுரம் அல்லது புதுச்சேரி வழியாகவோ சென்றடையலாம். நீங்கள் தென் தமிழ்நாட்டின் கோயில் நகரங்களான மதுரை அல்லது திருச்சிராப்பள்ளியிலிருந்து வருகிறீர்கள் என்றால், திண்டிவனம் வரை சாலை வழியாகச் சென்று, அங்கிருந்து வந்தவாசி வழியாகச் செல்லும் மாநில நெடுஞ்சாலை 116-ஐப் பயன்படுத்தலாம்.
பார்க்க
[edit | edit source]நடந்து செல்ல
[edit | edit source]துரதிர்ஷ்டவசமாக, இந்நகரத்தின் துல்லியமான வரைபடத்தைக் கண்டறிவது கடினம். இருப்பினும், நகரத்தின் திசையமைப்பை அறிந்துகொள்ளவும், முக்கியக் கோயில்கள் அமைந்துள்ள இடங்களைக் கண்டறிய கூகுள் வரைபடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்; உங்களுக்கு அது மட்டுமே பயன்படும். ஒருமுறை நகரத்தின் பொதுவான திசையை நீங்கள் தெரிந்துகொண்டால், கோவில்களின் உயரமான கோபுரங்கள் வைத்து அவற்றை மிக எளிதாகக் கண்டறிந்துவிடலாம். ஒரு எச்சரிக்கை: காஞ்சிபுரத்தின் நடைபாதைகள் நடந்து செல்வதற்கு ஏற்ற வகையில் இல்லை! பல கடைகள் தங்களுக்குக் கூடுதல் இடவசதிக்காக, தங்கள் பொருட்களை நடைபாதைகளிலேயே அடுக்கி வைத்திருக்கின்றன; மேலும் மகிழுந்துகள், இருசக்கர வாகனங்கள் போன்றவை நடைபாதைகளிலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால், நீங்கள் பெரும்பாலும் நடைபாதையிலிருந்து விலகிச் சாலையிலேயே நடக்கும் நிலைக்கு உள்ளாக நேரிடும்; அங்கே நீங்கள் வாகனப் போக்குவரத்திற்கு இடையே மிகுந்த கவனத்துடன் நடக்க வேண்டியிருக்கும். வானிலையைப் பொறுத்தவரை, காஞ்சிபுரம் சென்னை நகரைப் போல அதிக ஈரப்பதம் (புழுக்கம்) கொண்டதல்ல; எனவே இங்கு நடந்து செல்வது அவ்வளவு சோர்வைத் தராது. இருப்பினும், இந்தியக் கோடைக்கால வெப்பத்திற்கு நீங்கள் பழகாதவராக இருந்தால், நடந்து செல்வது உங்களுக்குச் சோர்வை ஏற்படுத்தக்கூடும். பாதுகாப்பாக நடக்க, காலையில் சற்று முன்னதாகவே (சுமார் 7 மணி அளவில்) உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள்; காலைப் பொழுதின் பிற்பகுதியில் ஓய்வெடுக்கத் திரும்பி வந்துவிட்டு, மாலையில் மீண்டும் வெளியே செல்லுங்கள். எப்படியாயினும், ஒளிப்படங்கள் எடுப்பதற்கு காலை மற்றும் மாலைப் பொழுதுகளே மிகச் சிறந்த நேரங்களாகும்.
தானியில்
[edit | edit source]ஆட்டோ ரிக்ஷா எனப்படும் தானி சேவைகளும் இங்கு கிடைக்கின்றன. பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் அதற்கான கட்டணத்தை பேசி முடித்துக்கொள்ள வேண்டும்; நகரின் அனைத்துப் பகுதிகளிலும் இவற்றை நீங்கள் காணலாம்.
நீங்கள் கோயில்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தால், கோயில்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்புச் சலுகையை (package deal) பேசிப் பெற்றுக்கொள்ளலாம்; நீங்கள் எத்தனை அல்லது எந்தெந்தக் கோவில்களுக்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தே இதற்கான கட்டணம் அமையும். கட்டணம் குறித்த ஒரு பொதுவான விதி என்னவென்றால், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல சுமார் ₹20 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தானிகளில் காஞ்சிபுரத்தில் பிரபலமான நான்கு கோயில்களுக்கு அரை நாளுக்குள் அழைத்து காட்டுவார்கள். இதன் மூலம் விரைவாக முக்கிய கோயில்களை குறைந்த செலவில் தரிசனம் செய்யலாம்.
டாக்சியில்
[edit | edit source]பேருந்து நிலையத்திற்குச் சற்று வடக்கேயும், வட்டச் சாலைக்குக் கிழக்கேயும் ஏராளமான அம்பாசிடர் டாக்ஸிகள் காத்திருக்கின்றன. நீங்கள் ஒரு குழுவாகப் பயணம் செய்கிறீர்கள் என்றால், ஆட்டோ ரிக்ஷாக்களை நாடிச் செல்வதற்குப் பதிலாக, ஒரு நாள் முழுவதற்கும் ஒரு ஓட்டுநரை அமர்த்திக்கொள்ளப் பேசி முடிவெடுப்பது உங்களுக்குச் சிறந்ததாக இருக்கலாம்.
பார்க்க
[edit | edit source]- ஏகாம்பரேசுவரர் கோயில் நகரின் வடமேற்கில் அமைந்துள்ளது (வானுயர நிற்கும் பிரம்மாண்டமான கோபுரத்தைத் தேடுங்கள்!). இது நகரின் மிக உயரமான, மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரமிக்க வைக்கும் கோயிலாகும். 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில், பல்லவர் காலத்தைச் சேர்ந்தது. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நிலத்தை இது குறிக்கிறது. ஏராளமான கல் வேலைப்பாடுகளைக் கொண்ட இக்கோயில், மிக முக்கியமான சிவன் கோயில்களில் ஒன்றாகும். இதன் கருவறையில், 3500 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் ஒரு மாமரம் உள்ளது. இது நான்கு வேதங்களின் வடிவமாகத் திகழ்வதோடு, ஒவ்வொரு பருவத்திலும் நான்கு விதமான சுவைகளில் பழங்களைத் தருகிறது. கோயிலின் 40 ஏக்கர் பரப்பளவில் பெரும்பாலான பகுதி பார்வையாளர்களுக்கு மூடப்பட்டிருந்தாலும், அதன் மையக் கட்டிடம் மிகவும் பிரமிக்க வைக்கிறது. இது ஏகாம்பரநாதர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
- பன்னாட்டு நூலகம் காஞ்சிபுரம் நகரத்திலிருந்து 3.5 கி.மீ. தொலைவில் உள்ள ஏனத்தூரில் அமைந்துள்ளது. இந்த நூலகம், ஓலைச்சுவடிகளின் கருவூலமாகத் திகழ்கிறது. நூலகத்தின் முன்பாக, 60 அடி உயரமுள்ள ஆதி சங்கராச்சாரியாரின் திருவுருவச் சிலை கம்பீரமாக அமைந்துள்ளது. இந்த நூலகம், காஞ்சிபுரம் சங்கரப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாகும்.
- கச்சபேஸ்வரர் கோயில்
- கைலாசநாதர் கோயில், கட்டடக்கலையின் சிறப்பம்சமாகத் திகழ்வதால், கட்டாயம் காணவேண்டிய கோயிலாகும். இக்கோயிலின் கட்டடக்கலை, மாமல்லபுரம் கோயிலின் கட்டிடக்கலையை மிகவும் ஒத்திருக்கிறது.
- காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்
- வைகுந்த பெருமாள் கோயில் இக்கோயிலின் கருவறையைச் சுற்றி, அழகிய தூண்களைக் கொண்ட மண்டபங்கள் அமைந்துள்ளன. மூன்று நிலைகளைக் கொண்ட கோபுரத்தைக் கொண்ட, மிகவும் தொன்மையான கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
- வரதராச பெருமாள் கோயில் காஞ்சியிலிருந்து வரும்போது சாலையிலிருந்து, பசுமையான வயல்வெளிகளுக்கு அப்பால் நோக்கும்போது, இக்கோயிலின் கோபுரம் மிகவும் பிரம்மாண்டமாகத் திகழ்கிறது.
- காஞ்சி குடில்: இந்து சமயத்தின் தொன்மையான பண்பாட்டுப் பாரம்பரியத்தை காட்ட, பார்வையாளர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள ஒரு சிறிய இல்லமாகும்.
- காஞ்சி சங்கர மடம்.
- இலட்சுமி நாராயண பெருமாள் கோயில், நீர்வளூர்
வாங்க
[edit | edit source]காஞ்சிபுரம் நகரானது, பட்டுப்புடவைகளுக்கு மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்கு பல கூட்டுறவுப் பட்டுப்புடவைக் கடைகள் உள்ளன.
செய்ய
[edit | edit source]காஞ்சி சங்கர மடம் மாலை வேளைகளில் 'கச்சேரிகள்' — அதாவது, தென்னிந்திய செவ்வியல் இசை நிகழ்ச்சிகளை — நடத்துகிறது. அங்கே ஏதேனும் நிகழ்ச்சி நடைபெறுகிறதா என்பதை அறியவும், அதைப் பார்க்க நீங்கள் அங்கு செல்லலாம்.
வாங்க
[edit | edit source]காஞ்சிபுரம் ஒரு புகழ்பெற்ற கைத்தறி பட்டு மையமாகும்; இங்கு நீங்கள் சேலைகள், துண்டுகள், சால்வைகள் அல்லது வீட்டிற்குத் தேவையான துணி வகைகளை வாங்கும்போது, பல்வேறு கடைகளை ஒப்பிட்டுப் பார்த்து வாங்கினால், மிகச் சிறந்த விலையில் பொருட்களைப் பெறலாம். டாக்ஸி அல்லது தானி ஓட்டுநர் உங்களை ஏதேனும் ஒரு கடைக்கு அழைத்துச் சென்றால், நீங்கள் செலுத்தும் விலையில் அவருக்கான தரகுத் தொகையும் உள்ளடங்கியிருக்கும்; எனவே, எதையும் வாங்குவதற்கு முடிவெடுக்கும் முன், நீங்களே தனிச்சையாகப் பல கடைகளுக்குச் சென்று பார்வையிடுவது நல்லது. பெரும்பாலான பட்டுக்கடைகள் மகாத்மா காந்தி சாலையில் அமைந்துள்ளன.
உண்ண
[edit | edit source]- சக்தி கணபதி உணவகம் நகரில் மூன்று கிளைகளுடன் இயங்கி வருகிறது. இங்கு விலைக்கு ஏற்ற தரமான உணவு கிடைக்கிறது.
- சங்கீதா சைவ உணவகம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது.
- சரவணபவன் உணவகம்.
உறங்க
[edit | edit source]- ஜி.ஆர்.டி. ரிஜென்சி (GRT Regency) 87 காந்தி சாலை. இலவச இணைய வசதியுடன் கூடிய ஒரு சிறந்த தங்கும் விடுதி.
- ஓட்டல் சிம்லா லாட்ஜ், மருத்துவமனை சாலை மற்றும் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சந்திப்பு (பேருந்து நிலையம் அருகிலுள்ள வட்டச்சந்தியில்), ☏ +91 44-27223342. வெளியேறும் நேரம்: 12. மிகவும் அடிப்படை வசதிகள் மற்றும் மின்விசிறியுடன் கூடிய விசாலமான, பளிங்கு பதிக்கப்பட்ட இரண்டுபேர் தங்கும் அறைகள் ₹600-இக்குக் கிடைக்கின்றன. ஒற்றையர் தங்கும் அறைகள் இல்லை என்று அவர்கள் கூறினர். நிச்சயமாக இது ஒரு முதல் தேர்வு அல்ல, ஆனால் இதன் இருப்பிடம் மிகவும் முக்கியமானது. மேலும் பகல் வெயிலில் அலைந்து தேடுவதை விட இது சிறந்தது! குளிர்சாதன வசதியுள்ள அறைகளின் வாடகை ₹900 எனக் கூறப்படுகிறது.
- ஜெய பாலா (ஜி.ஆர்.டி. ரிஜென்சிக்கு அருகில் மற்றும் சரவண பவன் உணவகத்திற்கு மேலே அமைந்துள்ளது). எளிமையானது, ஆனால் சுத்தமானது. வாடகை குறைவு; ஊழியர்கள் அக்கறையுடன் சேவையாற்றுகின்றனர்.
அடுத்துச் செல்ல
[edit | edit source]- மாமல்லபுரம்
- சென்னை
- வேலூர்
- திருத்தணி